இம்முறை பாடசாலை விடுமுறை டிசம்பர் 22 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.

அதன்படி, 2024ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 02 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்

பாராளுமன்றத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.


பாராளுமன்ற உறுப்பினர் சமன் பிரிய ஹேரத் எழுப்பிய வாய்மூல கேள்விக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.